WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 9, 2014

ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் தேவை?

   நுங்கம்பாக்கம் : ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணி நியமனங்களில்
மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளுவர் கோட்டம் அருகில்,ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் வேண்டும் என கூறி, ஏழு அமைப்புகளை சேர்ந்தோர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்கள்கோரிக்கைகளில் சில:

* தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில், மதிப்பெண் தளர்வை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. அதன்பின், அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மதிப்பெண் தளர்வின் மூலம் பணி நியமனம் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு, உடனே, மேல்முறையீடு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். 

* இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் பின்பற்றப்படும் 'வெயிட்டேஜ்' முறை, முதல் தலைமுறை ஆசிரியர்களை பாதிப்பதால், அதை திரும்ப பெற வேண்டும்.

* இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான, காலி பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 

* ஆசிரியர் தகுதித்தேர்வு, பணி நியமன நடைமுறைகளில் தமிழ்நாடு அரசு உரிய, சீராய்வின் மூலம், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.