WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 26, 2014

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவித் பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 650 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அதிக மதிப்பெண்கள் பெற பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இவர்கள் மருத்துவம்,பொறியியல், வேளாண்மை ஆகிய உயர் படிப்புகளை மேற்கொள்வதற்காக சிறந்த ஆசிரியர்கள், வல்லுனர்கள் மூலம் வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகிறது. சின்னசேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும், கள்ளக்குறிச்சி அடுத்த பெரிய சிறுவந்தூர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும் ஊக்குவிப்பு பயிற்சி முகாம், இன்று (26ம் தேதி) துவங்கி, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இத்தகவலை விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.