மத்திய அரசு வரும் 28ம் தேதி 2015-2016ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் கருத்தில் கொண்டு மாத சம்பளம் வாங்குபவர்களின் வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது ரூ.2.5 லட்சம் வரையில் மாத சம்பளம் பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டியது இல்லை. இந்த வரம்பை குறைந்தபட்ச ரூ.3 லட்சம் என்ற அளவிற்காவது உயர்த்தி அதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.