WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 17, 2015

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: ஏப்ரல் 12-க்குள் முடிக்க உத்தரவு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 66 மையங்களில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலிருந்தும் சி.டி.க்கள் மூலம் மதிப்பெண் விவரங்கள் பெறப்படும்.

மொத்தம் ஒன்றரை கோடி விடைத்தாள் மதிப்பெண் விவரங்கள் சி.டி.க்களில் பெறப்படும் எனபதால் தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஒன்றுக்கு பலமுறை இந்த மதிப்பெண்கள் விவரம் சரிபார்க்கப்படும்.

அதன்பிறகே, அரசுத் தகவல் மையத்துக்கு இந்த விவரங்கள் அனுப்பப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஏப்ரல் இறுதிக்குள் இந்தப் பணிகள் அனைத்தையும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு, தமிழக அரசின் ஒப்புதலோடு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

நிகழாண்டும் வழக்கம்போல் மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.