WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 17, 2015

பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதற்கான முதற்கட்ட பணி துவக்கம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கான முதற்கட்ட பணி,
நேற்று(மார்ச் 16) துவங்கியது. சென்னை உட்பட, தமிழகம் முழுவதும், 73 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி, நாளை(மார்ச் 18) துவங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதி துவங்கியது; வரும் 31ம் தேதி முடிகிறது. சென்னையில் நான்கு உட்பட, மாநிலம் முழுவதும் 73 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்க உள்ளது. விடைத்தாள்களின் ரகசியம் கருதி, மையங்களின் விவரம் வெளியிடப்படவில்லை. முதற்கட்டமாக, போலீஸ் பாதுகாப்புடன், விடைத்தாள் கட்டுகள், நேற்று பிரிக்கப்பட்டன. அந்தந்த மண்டல பொறுப்பு கல்வி அதிகாரிகள், முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், விடைத்தாள் கட்டுகளை, தேர்வு மையத்தில் இருந்து வந்த பட்டியலின்படி, சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர். இன்றும், விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு மற்றும் சரிபார்ப்பு பணி நடக்கும். நாளை, தமிழ் முதல் தாள் திருத்தும் பணி துவங்குகிறது. நாளை மறுநாள், தமிழ் இரண்டாம் தாள்; அதன்பின், ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. இதற்கான பட்டியலை தேர்வுத் துறை இயக்ககம் தயார் செய்து, ஆசிரியர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க, ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.