WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 4, 2015

பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வில் 2வது முறையாக பெயில் ஆன 3000 பேர்: பணி நீக்கம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு!!

பீகார் மாநிலம் கல்வியில் மிகவும்
பின் தங்கிய மாநிலம் என்பதை நிரூபிக்கும் வகையில் பெற்றோர்களே மாணவர்களுக்கு பிட் எடுத்துக்கொண்டு வந்து தந்ததை பார்த்தோம். தற்போது அம்மாநிலத்தில் ஆசிரியர்களின் அறிவுத்தகுதியும் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் 2வது முறையாக ஏறத்தாழ 3000 ஆசிரியர்கள் கோட்டை விட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் பதவி நீக்கம் செய்யப்ட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. தேர்வு எழுதிய ஆசிரியர்களில் ஒருவரான ரிஸ்வானா கட்டூன் என்பவர், இரு முறை பெயிலானதால் தன்னை பணி நீக்கம் செய்யக்கூடாது என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் மீது வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே தேர்வில் தோல்வியடைந்த அனைவரும் அடுத்த வாரத்தில் பணி நீககம் செய்யப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.