WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 4, 2015

பிளஸ்-2 விடைத்தாள் நகல்களை இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு

பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கில மொழி விடைத்தாள்கள் தமிழ்நாடு முழுவதும் 66 மையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டன.

தற்போது அந்த பணி முடிவடைந்து விட்டது. இன்று அல்லது நாளைக்குள் எந்த தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து, அதற்குரிய கமிட்டி முடிவு செய்து அறிவித்து விடும்.

பின்னர் அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கும் இதுகுறித்து தகவல் அனுப்புவார்.

6-ந்தேதி முதல் பிளஸ்-2 கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. மதிப்பீடு செய்யும் பணி 13-ந்தேதி முடிவடைய இருக்கிறது.

அதன்பின்னர் மதிப்பெண்கள் கம்யூட்டரில் ஏற்றப்பட்டு, மே முதல் வாரத்தில் கடந்த ஆண்டு போல் தேர்வு முடிவை வெளியிட அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

மாணவர்கள் நலன் கருதி, முடிந்தால் முன்கூட்டியே முடிவை வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பிறகு மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர்களுக்கு இணையதளத்தில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.