அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக். உள்ளிட்ட படிப்பு களுக்கு ‘டான்செட்’ எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாண வர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க நேற்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். சென்னை ஒருங்கிணைப்பு மையத்தில் மட்டும் நேரடியாக 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கிடையே, எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள் ளது. அதன்படி, எம்.இ. கணினி அறிவியல் படிப்புக்கு விண்ணப் பிக்க புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, இது வரை எம்சிஏ பட்டதாரிகள் எம்.இ. கணினி அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இனி எம்சிஏ பட்டதாரிகள் எம்.இ. கணினி அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது.
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங், சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் ஆகிய பாடங்களில் பிஇ அல்லது பிடெக் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே எம்இ கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இயலும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனியார் சுயநிதி கல்லூரிகள் பிஇ, பிடெக் படிப்பைப் போன்று அரசு ஒதுக்கீட்டுக்கு குறிப்பிட்ட இடங்களை வழங்கத் தேவை யில்லை. அவை விருப்பப்பட்டு கொடுக்கும் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அதேநேரத் தில், எம்சிஏ, எம்பிஏ படிப்புகளில் தனியார் சுயநிதி கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்குகின்றன. சிறுபான்மையினர் கல்லூரிகளாக இருப்பின் 30 சதவீத இடங்கள் வழங்கப்படும். கடந்த ஆண்டு வரை இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டில் இந்த முறையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.