WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 20, 2015

"அரசு அலுவலகங்களில் ஸ்டெனோகிராபர்களுக்கு தேவை அதிகம்".

அரசு அலுவலகங்களில் ஸ்டெனோகிராபர்களுக்கு தேவை அதிகம் உள்ளது
என, வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர் தெரிவித்தார். தி ஸ்டெனோகிராபர்ஸ் கில்டு சார்பில், சுருக்கு எழுத்தின் தந்தை சர் ஐசக் பிட்மேனின் 203வது பிறந்த நாள் விழா, சென்னை, தி.நகரில் நடந்தது. அதில், வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர் பேசியதாவது: கல்லுாரியில் படிக்கும்போது, முக்கிய குறிப்புகள் எடுக்க, ஷார்டன், டைப்பிங் படித்தேன். ஆனால், இந்த இரண்டு படிப்புகளும், கல்லுாரி படிப்புடன் நின்று விடாமல், பல துறையில் சாதிக்க பெரிதும் உதவின. ஒருவர், அலுவலகம் ரீதியான துறையில் சாதிக்க வேண்டும் என்றால், ஆங்கிலம் மற்றும் ஸ்டெனோகிராபிங் படிப்பை கற்க வேண்டும். கணினி, அலைபேசி என, பல தொழில்நுட்ப சாதனங்கள் வந்தாலும், அரசு அலுவலகங்களில், ஸ்டெனோகிராபர்களுக்கு தேவை அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.