WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 3, 2015

கணினி விவரப்பதிவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வட்டார வளமையங்களில் காலியாக உள்ள 13 கணினி விவரப் பதிவாளர் பணியிடங்களுக்கு வரும் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களை கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். கல்வித் தகுதி பிளஸ்2 தேர்ச்சி தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை சான்று மற்றும் எம்.எஸ்.ஆபீஸ் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஜூன் 1 ஆம் தேதியன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பித்த நபர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் அழைப்பாணையில் தெரிவிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்தினை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், மோகனூர் சாலை, நாமக்கல்637 001 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.