WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 5, 2015

ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணி நியமனம் பள்ளிக்கல்விச் செயலாளரிடம், இடைநிலை ஆசிரியர்கள் மனு

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அலுவலகத்தில், 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.சி.ஏ.) சென்னை தலைமைச் செயலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கான 669 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை. 

ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், இதுவரை ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த விதிகளின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆதிதிராவிட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து. உடனடியாக தேர்வுப்பட்டியலை வெளியிடவேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.