WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 3, 2015

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு இணைய வழி கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி: 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஜூன் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒப்படைக்கலாம்.
கலந்தாய்வு விவரம்: சிறப்புப் பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள்) ஜூலை 1-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும். ஆங்கில மொழியில் பயில விண்ணப்பித்துள்ள மாணவிகள், சிறுபான்மை மொழியில் பயில விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜூலை 2-ஆம் தேதியும், தொழிற்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 3-ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படும்.
கலைப்பிரிவினருக்கு ஜூலை 4, 6 ஆகிய தேதிகளிலும் அறிவியல் பிரிவினருக்கு ஜூலை 7,8,9,10 ஆகிய தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.