WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 9, 2015

பள்ளி மாணவ, மாணவியரின் மெட்ரோ ரயில் பயணம்.

'மெட்ரோ ரயில சுத்திப் பாக்கப் போறோம்' என, அரசு மற்றும் தனியார் பள்ளி
மாணவ, மாணவியரை, மெட்ரோ ரயிலில் பயணம் சென்று சுற்றிக் காட்ட, ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். மெட்ரோ ரயிலில் பயணக் கட்டணம் அதிகமாக இருப்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவசமாகவோ அல்லது அவர்களிடம் வசூலித்தோ, கட்டணம் செலுத்த முடியாது. எனவே, பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் இருந்து பயணக் கட்டணம் செலுத்தி, அரசு பள்ளி மாணவ, மாணவியரை அழைத்துச் செல்ல, ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் பேசி, மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லவும், கட்டண சலுகை பெறவும் முடிவு செய்துள்ளதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, கட்டண சலுகை இல்லாமல் பயணம் செய்ய வைக்கலாம் என்றும், அனுமதி மட்டுமே தேவை என்றும், தனியார் பள்ளியினர், கல்வித் துறையுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.