WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 20, 2015

மேல்நிலை துணைத்தேர்வு; கால அவகாசம் நீடிப்பு

மேல்நிலை துணைத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வரும்
ஆகஸ்ட் 22ம் தேதி மாலை 5.00 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தேர்வு இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்: நடைபெறவிருக்கும் செப்டம்பர்/அக்டோபர் 2015க்கான மேல்நிலை துணைத்தேர்விற்க்கு தனித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் ஆகஸ்ட் 19 வரை விண்ணப்பிக்கக் கால் அவகாசம் வழங்கப்பட்டது. தனித் தேர்வர்கள் நலனைக் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் சேவை மையங்களின் மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் www.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று சேவை மையங்களின் விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.