WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 10, 2015

இனி ஆசிரியர்கள் சாக்பீஸ் பயன்படுத்த தேவையில்லை: வந்துவிட்டது மின்னணுத் திரை கற்பித்தல் முறை.

                       
மாநிலத்திலே முதன்முறையாக மதுரை மருத்துவக் கல்லூரி வகுப்பறைகளில் மின்னணு எழுதும் பலகைகள் அமைக்கப்பட்டு, பேராசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

கரும்பலகை எழுத்துகள், வகுப்பின் கடைசி நாற்காலி மாணவர்க்கு தெரியாத நிலை என்று பல்வேறு இன்னல்கள் இருந்து வந்தன. தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலே, மின்னணு எழுதும் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளை நிற மின்னணுப் பலகையுடன் கணினி, மின்னணு பேனாக்களை உள்ளன.

மின்னணுப் பேனாவால் 6 வண்ணத்தில் எழுதலாம். மின்னணுப் பலகையில் பாடங்களுக்கான உருவத்தை தத்ரூபமாக செயல்பாட்டுடன் கொண்டுவரலாம். மின்னணு பலகையில் எழுதப்படும் அனைத்துமே விடியோ, புகைப்படமாக பதிவாகிறது. ஆகவே எப்போது வேண்டுமானாலும் அதை மீண்டும் எடுத்துப் பார்க்கலாம்.

இதற்கான பயிற்சியை பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் பெற்றுள்ளனர். இதனால் பலவித இன்னல்கள் தவிர்க்கக்கூடும் என்று மருத்துவக் கல்லூரி டீன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.