தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக சர்வே கூறுகிறது.
இந்தப் பற்றாக்குறை மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கின்றது. நாடு முழுவதும் இந்த நிலை நீடித்து வருவதாகவும், ஒரு பள்ளிக்கு ஒரு மொழிப்பாட ஆசிரியர்களே, அனைத்து வகுப்புகளுக்கும் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சாதனையாளர் சர்வே கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 35.85 சதவீதம் மொழி பாடத்திற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. அண்டை மாநிலங்களான கேரளா (11.23), தெலங்கானா (29.45), ஆந்திரா (23.32) மற்றும் கர்நாடகாவில் (2.87) சதவீதம் என ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் நிலை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகின்றது. மேலும், இந்த நிலை நீடிக்குமேயானால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக மாற வாய்ப்புள்ளது. இதற்கு, நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவாக இருப்பதே முதற்கட்ட காரணம் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.