திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் 5,000 ஆசிரியர்களில் மூன்றில் ஒரு பங்கினர்தான் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி தகுதி பெற்றுள்ளனர். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி ஆசிரியர்களின் தகுதி தொடர்பாக யு.ஜி.சி-யின் விதிமுறைகளுக்கு எதிராக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. எனவே, அந்தத் தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் 4,240 ஆசிரியர்களில், 1,970 ஆசிரியர்களுக்கு மட்டுமே யு.ஜி.சி-யின் விதிமுறைப்படி, பல்கலைக்கழகத்திடமிருந்து அவர்கள் பணிபுரிவதற்கான ஒப்புதலை கல்லூரிகள் பெற்றுள்ளன. மீதமுள்ள 2,270 ஆசிரியர்கள் பணிபுரிவதற்கான முறையான ஒப்புதலை திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திடமிருந்து பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. பின்னர், நீதிபதிகள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு 2 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று கூறி வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.