WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 7, 2015

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு: மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு: மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
2015-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு பற்றிய ஆராய்ச்சிக்காக அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் லிண்டால், அமெரிக்காவைச் சேர்ந்த பால் மோட்ரிக் மற்றும் அஜிஸ் சன்கார் ஆகியோருக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டி.என்.ஏ.வில் ஏற்படும் மரபணு மாற்றங்களை சரி செய்வதில் இவர்களது கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.