WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 21, 2015

கல்வி தருவாய் கலைவாணி தாயே!அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.


*மூவுலகையும் படைத்து காக்கும் கலைவாணியே! கவிதை புனையும் ஆற்றல்
அளிப்பவளே! கலைகளின் தலைவியே! மூங்கில் போன்ற தோள்களைக் கொண்டவளே! குயில் போல இனிய குரல் பெற்றவளே! நிலவொளி போல ஒளிமுகம் கொண்டவளே! அறுபத்து நான்கு கலைகளையும் அருள்பவளே! எங்களுக்கு கல்விச் செல்வத்தை அருள வேண்டும்.

*வெள்ளைத் தாமரை மலரில் வீற்றிருப்பவளே! பிரம்மதேவரின் விருப்பத்திற்குஉரியவளே! வேதத்தின் தாயாகத் திகழ்பவளே! குளிர்ச்சி மிக்க முத்து மாலைஅணிந்தவளே! அறிஞர்களால் போற்றப்படுபவளே! மயில் போன்ற சாயல் கொண்டவளே! சரஸ்வதி தேவியே! உம்மை வணங்குகிறோம்.

*அறியாமை இருளைப் போக்குபவளே! வேதங்களின் முடிவாகத் திகழ்பவளே! உண்மை வழி நடப்போரின் உள்ளத்தில் வாழ்பவளே! மான் போல மருளும் விழிகளைக் கொண்டவளே! வாதிடும் திறமை அளிப்பவளே! மதிநுட்பம் தருபவளே! சிந்தைக்கு இனியவளே! எங்களுக்கு நல்ல புத்தியும், திறமையும் தர வேண்டும்.
* ஸ்படிக மாலை அணிந்தவளே! ஓலைச் சுவடியைக் கையில் தாங்கியவளே! அன்னப்பறவை மீது அமர்ந்தவளே! வீணை இசையில் தேர்ந்தவளே! புலவர்களின் நாவில் குடியிருப்பவளே! பாட்டிலும், இசையிலும் விருப்பம் கொண்டவளே! எங்களுக்கு மதிநுட்பத்தை கொடுத்தருள்வாயாக.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.