WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 3, 2015

அரசு பள்ளிகளில் தனித்திறன் போட்டி.

அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரும், 13ம் தேதி முதல்
தனித்திறன் போட்டிகள் நடத்துமாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையா, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பாடம் எடுக்கும் போதும், வகுப்புகள் முடிந்த பிறகும், ஒவ்வொரு மாணவரையும், ஏதாவது ஒரு பாடத்தில், துறையில் தனித்திறன் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பைக் கண்டறிய வேண்டும். அதை செயல்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்த வேண்டும். வரும், 13ம் தேதி, கல்வி மாவட்ட அளவில்; 30ம் தேதி, வருவாய் மாவட்ட அளவில்; நவ., 12ல் மாநில அளவிலும் தனித்திறன் போட்டிகள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.