WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 23, 2015

24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு.


                                 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு
இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று காலை மேற்கு நோக்கி குமரிக்கடல் பகுதிக்கு நகர்ந்தது.



இதன் காரணமாக சென்னை புதுவை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலாடுதுறையில் 20 செ.மீ. மழையும் காரைக்காலில் 19 செ.மீ மழையும் பெய்தலும் உள் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக மயிது.



இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

குமரிக்கடலில் மாலத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

தமிழகத்தில் அக்டோபர் 1–ந் தேதி தொடங்கி 3 மாத வடகிழக்கு பருவமழையின் போது சராசரியாக 44.2 செ.மீ மழை பெய்யும். இப்போது 2 மாதம் நிறைவடையாத நிலையில் சராசரியாக அதிக அளவாக 47 செ.மீ மழை பெய்துள்ளது.

இவ்வாறு ரமணன் கூறினார்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.