அரசு பள்ளிகளில் வினியோகிக்க வழங்கிய அரசின் இலவச லேப்- டாப் பதுக்கப்படுவதாக எழுந்த தகவலால் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு 2011 முதல் அரசின் இலவச லேப்- டாப் வழக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
2015-16ல் மட்டும் படித்துகொண்டிருக்கும்போதே லேப்- டாப்களை வழங்க அரசு உத்தரவிட்டது.
தேவையான லேப்-டாப்கள் கொள்முதல் செய்து, மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 2015 நவம்பருக்குள்
வினியோகித்து முடிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், சில பள்ளிகளில் இலவச லேப்-டாப் பதுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாவட்டந்தோறும் கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளனர். சி.இ.ஓ.,அலுவலக பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓரிரு இடங்களில் மாணவர் களுக்கு வினியோகித்தது போக எஞ்சிய லேப் டாப்களை திரும்பி ஒப்படைக்காமல் வைத்திருக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கல்வித்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.