திருவள்ளுவர் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி,திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி,விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி மற்றும் கடலூர் அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் பல்கலை கழக வினாத்தாள் திருத்தும் பணிக்கு அனுமதிப் பெற செட்,நெட்,பி.எச்.டி ஆகியவற்றில் ஒன்றை கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .மேலும் தனியார் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை அளிக்கப் பட்டுள்ளது.அதாவது 2009 ஆண்டுக்குள் M.Phil தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதும் .மேலும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான approval list கல்லூரி நிர்வாகத்தால் பல்கலை கழகத்திற்கு அனுப்ப படுவதில்லை.இதனால் தான் 2009 க்கு முன்பு M.Phil முடித்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு வினாத்தாள் திருத்த அனுமதி வழங்கப்படவில்லை என திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம் மற்றும் கடலூர் கலைக்கல்லூரி, கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் பல்கலை கழகத்தேர்வு நடத்தும் போது விதிமுறைகளை பின்பற்றாமல் கௌரவ விரிவுரையாளர்களை hall superdent பணிக்கு அனுமதிக்கிறது.ஆனால் அந்த வினாத்தாள் திருத்த எங்களுக்கு அனுமதி மறுப்பது சட்ட விரோதமானது என m.phil முடித்த விரிவுரையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.