தமிழகத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 2,125 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன.
கடந்த, 2015 மே, 31ம் தேதி நிலவரப்படி ஓய்வு பெறும் அனைத்து வகை முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம், 3,025 என, உத்தேசமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 2,125 பணியிடங்கள், 50 சதவீதம் பதவி உயர்வு வாயிலாகவும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியலாகவும் நேரடியாகவும் நியமனம் செய்ய கூறப்பட்டுள்ளது.
அதன்படி, பதவி உயர்வு கலந்தாய்வின் மூலம் 1,063 இடங்களும், 1,062 இடங்கள் நேரடி நியமனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களை விதிகளுக்கு உட்பட்டு நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.