WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 11, 2016

பிளஸ் 2 மதிப்பீட்டு முகாம்; முதல்கட்ட பணிகள் துவக்கம்.

                        


பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும், மதிப்பீட்டு முகாமுக்கான முதல்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த, 4ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. 14ம் தேதி முதல் முக்கியப்பாடங்களுக்கான தேர்வுகள் துவங்கவுள்ளன. இந்நிலையில், 14ம் தேதி முதல் மதிப்பீட்டு பணிகளை துவக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

கோவை மாவட்டத்தில், ஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி மற்றும் சி.ஆர்.ஆர். பள்ளிகளில் மதிப்பீட்டு முகாம் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக, தமிழ் பாடத்துக்கான விடைத்தாள்கள் தேர்வு மையங்களிலில் இருந்து சேகரிக்கப்பட்டு, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. 

மேலும், விடைத்தாள் முகாம்களில் பங்கேற்கும் ஆசிரியர்களின் பட்டியல் இறுதிசெய்யும் பணிகள் தற்போது கோவையில் நடந்துவருகின்றன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.