பிளஸ் 2 சிறப்பு துணைதேர்வுக்கு நாளையும், நாளை மறுநாளும், தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 சிறப்புத்
துணைத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து, தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவர்கள், கடந்த மார்ச்சில் நடந்த, பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளி மாணவராகவோ அல்லது தனித்தேர்வராகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.
ஏற்கனவே எழுதிய தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு விண்ணப்பித்தும் வருகை புரியாத, அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில், தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தேர்வர்கள், சென்னையில் மட்டுமே தேர்வெழுத இயலும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
அப்போது, தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தங்கள், ஹால் டிக்கெட்டையும், பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். அதற்கு உரிய கட்டணமும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.