WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 18, 2016

ஆசிரியர் பணி வழங்க கோரிமுதல்வர் அலுவலகத்தில் மனு.


இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டும்' என, பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் சங்கம் சார்பில், முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த, 1992 - 94ல் அங்கீகாரம் வழங்கப்பட்ட, தனியார் ஆசிரியர் பள்ளியில் படித்தவர்கள், நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்டு, மீண்டும், 2002 - 2004ல் உங்களின் உத்தரவால், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படித்தோம். எங்களில், 200 பேர் இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும், இதுநாள் வரை வேலை கிடைக்கவில்லை. இது தொடர்பாக, 2011ல் தங்களை சந்தித்து, மனு கொடுத்துள்ளோம். எங்களுக்கு சிறப்பு அரசாணை மூலம், இடைநிலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.