ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட், 3 முதல், 21ம் தேதி வரை, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, தொடக்க கல்வி இயக்குனர்
இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வரும், 19ம் தேதி முதல், 28 வரை, ஆசிரியர் மாறுதல் விண்ணப்பங்களை, உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் அளிக்க வேண்டும்
உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங், ஆக., 3ல் நடக்கும். நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அலுவலராக, ஆக., 4ல் பணி மாறுதல் வழங்கப்படும்
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு; பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், ஒன்றியத்திற்குள் பொது மாறுதல், பதவி உயர்வு; மாவட்டத்திற்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பொது மாறுதல் ஆகியவற்றுக்கான கவுன்சிலிங், ஆக., 6ல் நடக்கும்
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆக., 7ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கவுன்சிலிங், ஆக., 13ம் தேதியும் நடக்கும்
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் இடமாறுதல், மாவட்டத்திற்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், ஆக., 14ல் நடக்கும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, ஆன்லைன் கவுன்சிலிங், ஆக., 20ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, ஆன்லைன் கவுன்சிலிங், ஆக., 21ம் தேதியும் நடக்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.