WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 6, 2016

ஒரே ஒரு ஆசிரியர் பள்ளிகள் எத்தனை?

முன்னாள் இந்திய ஜனாதிபதி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்., 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று ஆசிரியர் தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் பள்ளிகள் இன்னும் செயல்படுகின்றன. அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் இருந்தால் அங்கு தரமான கல்வி எப்படி மாணவர்களுக்கு கிடைக்கும். இந்நிலை வருத்தத்துக்குரியது தான். ஓராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர் தான் அனைத்துமே கிளர்க், வார்டன், உதவியாளர் என அனைத்து பணிகளையும் ஆசிரியரே செய்ய வேண்டும்.2014 - 15 கல்வி ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,05,630 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்படுகின்றன என பார்லிமென்ட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓராசிரியர் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலங்களில் முதலிடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது. இங்கு 17, 874 பள்ளிகள் ஓராசிரியருடன் செயல்படுகின்றன. 4 மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் யூனியன் பிரதேசங்கள் சிறப்பாக உள்ளன. டாமன் மற்றும் டையூ, புதுச்சேரி, சண்டிகார், லட்சத்தீவு ஆகிய 4 யூனியன் பிரதேசங்களில் ஓராசிரியர் பள்ளிகளே இல்லை. 30 அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி சட்டத்தின் படி, இந்தியாவில் 30 - 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.