WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 31, 2016

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி.

ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக,
பெரியார் பல்கலை உறுப்பு கல்லுாரி முதல்வர் ரவீந்திரநாத் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் கல்வியியல் கட்டுப்பாட்டின் கீழ், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்தும், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த பல்கலையில், கல்வியியல் படிப்புக்கான தேர்வுகளை நடத்த, தனியாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செயல்படுகிறார். இந்த பொறுப்பில் இருந்த, பேராசிரியர் மணிவண்ணன், 2015ல், ஓய்வு பெற்றார். அதனால், அவரது பொறுப்புகளை, பதிவாளர் கலைச்செல்வன் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், பெரியார் பல்கலை உறுப்பு கல்லுாரியான, பாப்பிரெட்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வராக இருந்த ரவீந்திர நாத் தாகூர், நேரடி நியமனத்தின்படி, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பதவியேற்றுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.