WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 12, 2016

வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்தி ரிசர்வ் வங்கி மறுப்பு.

வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்திக்கு ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளது. விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி (நவ.12), ஞாயிறு (நவ.13) ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டுமே பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செல்லாத 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள டிசம்பர் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுவரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி செயல்படும் என்று ஊடகங்களில் சனிக்கிழமை மாலை செய்தி வெளியானது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகப் பொறுப்பாளர் வி.ஜி.வெங்கடாசலபதி வெளியிட்ட செய்தியில், விடுமுறை நாள்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மட்டுமே பொருந்தும். எனவே, டிசம்பர் மாதம் வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்ற செய்தியை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளின் செயல்பாடு என்பது தேவைக்கேற்ப முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.