WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, January 4, 2017

8-ஆம் வகுப்பு தேர்வெழுதும் தனித் தேர்வர்கள் கவனத்துக்கு...

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள், தங்களது நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர்
ரா.வீரக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜன.4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள், www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பதிவிறக்கத்தின்போது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை யாருக்கும் அனுப்பி வைக்க முடியாது என்பதால் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.