தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்
இணைக்கப்படாததால், சிகிச்சைக்கு தவித்து வருகின்றனர்.
தமிழர்கள், பல்வேறு மாநிலங்களில் உயர்கல்வி படித்து, பிற மாநிலங்களிலும் அரசு பணிகளில் சேர்கின்றனர். இவர்கள் ஓய்வு பெற்ற பின், பூர்வீகமான தமிழகத்தில் குடியேறுகின்றனர்.
'இன்டர் ஸ்டேட் சஸ்பென்ஸ் அக்கவுன்ட்' மூலம், இவர்கள் வசிக்கும் ஊரில் உள்ள வங்கி மூலமே, இவர்கள் பணிபுரிந்த மாநில அரசின், ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இவர்கள் வேறு மாநிலத்தில், பணியாற்றி ஓய்வு பெற்றதாலும், அந்த மாநில அரசிடம் ஓய்வூதியம் பெறுவதாலும், தமிழக அரசின் எந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்திலும், சேர்க்கப்படுவதில்லை. இதனால், உயர்சிகிச்சை தேவைப்படும் போது, இவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து, ஓய்வூதியர்கள் கூறியதாவது: நாங்கள் தமிழகத்தில் குடியேறி விட்டதால், பணிபுரிந்த மாநிலத்திடம் ஓய்வூதியம் தவிர்த்து, வேறு எந்த சலுகையும் பெற முடியாது.
இது பற்றி நன்கு தெரிந்தும், தமிழக அரசு, எங்களை வேறு மாநில அரசு ஊழியர்களை போன்றே நடத்துகிறது. எங்களை சாதாரண மக்களாக கருதியோ அல்லது அரசு ஓய்வூதியர்களாக கருதியோ சந்தா பிடித்தம் செய்து, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.