தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு தற்போது 15000 ரூபாய் மாதசம்பளம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.2011 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்தால் கௌரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தர செய்வேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் வாக்குறுதியை 5 வருடமாக நிறைவேற்றவில்லை. அவர் நிறைவேற்ற தவறிய முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று.இது சம்பந்தமாக உயர்கல்வி துறை வட்டாரங்களை விசாரித்த போது தற்போதைய நிலவரப்படி ஊதிய உயர்வு அளிக்கும் எண்ணம் இல்லை. அண்ணாமலை பேராசிரியர்கள் பணிநிரவல் செய்ய இருப்பதால் போரட்டங்கள் நடைபெறாமல் இருக்கவும் ,போராட்டங்களை நீர்க்க செய்வதற்காக " ஊதிய உயர்வு விரைவில் அளிக்கப்படும் "என்று வதந்தி பரவுவதாக தகவல் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.