Monday, March 13, 2017
'டிமிக்கி' பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கடிவாளம்.
நிகர்நிலை பல்கலைகள், ஆராய்ச்சி மாணவர் விபரங்களை, இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்' என, பல்கலைகழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, பல்கலைகழக மானிய குழுவான, யு.ஜி.சி., உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில், நிகர்நிலை பல்கலைகள், கல்லுாரிகள், தங்களின் ஆராய்ச்சி மாணவர்கள் பட்டியல் மற்றும் விபரங்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, யு.ஜி.சி., அறிவுறுத்தியது. இருந்தும், பல பல்கலைகள், மாணவர்கள் பட்டியலை, யு.ஜி.சி.,க்கு மட்டும் அனுப்பி விட்டு, இணையதளத்தில் வெளியிடவில்லை. இதையடுத்து, 'அனைத்து நிகர்நிலை பல்கலைகளும், தங்களது ஆராய்ச்சி மாணவர்கள் பட்டியலை, இணையதளத்தில், இரு மாதங்களுக்குள் வெளியிட்டு, அதன் இணைய, 'லிங்க்' முகவரியை அனுப்ப வேண்டும்; அவை ஆய்வு செய்யப்படும்' என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. அதனால், பல்கலைகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.