மத்திய அரசு கொண்டுவரும் பொதுத் தேர்வுகளை தமிழக மாணவர்கள் சமாளிக்கும் வகையில் 54 ஆயிரம் கேள்வி}பதில்கள்
அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட 12 வார்டுகளில் 14 இடங்களில் ரூ. 21 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர்த் தேக்கத் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நீட் தேர்வு குறித்து 85 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொதுத் தேர்வுகளையும் தமிழக மாணவர்கள் சமாளிக்கும் வகையில் 54 ஆயிரம் கேள்வி}பதில்கள், வரைபடங்கள் அடங்கிய புத்தகம் தயாராகி வருகிறது. இதுகுறித்து, சட்டப்பேரவையில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.