WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 3, 2017

ஆசிரியர் பணி தேர்வு: 18 ஆயிரம் பேர் 'ஆப்சென்ட்' : பெண் பட்டதாரிகள் அதிகம் பங்கேற்பு.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 18 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை; கடும் கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடந்தது.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 3,375 முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் பணி இடங்
களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் நேற்று தேர்வு நடந்தது. 

எழுதவில்லை : இந்த தேர்வுக்கு, 2.18 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 
18 ஆயிரத்து, 182 பேர் தேர்வு எழுதவில்லை. காலை, 10 மணிக்கு துவங்கிய தேர்வு பகல், 1 மணி வரை நடந்தது. தேர்வில் பங்கேற்ற, முதுநிலை பட்டதாரிகள் பலர், தங்கள் குடும்பத்தினர், குழந்தைகளுடன், தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர்; சிலர் கைக்குழந்தைகளுடன் வந்தனர். 
தேர்வு மையத்திற்குள், 'பேனா, ஹால் டிக்கெட்' தவிர, வேறு எந்த பொருட்களும் அனுமதிக்கப்
படவில்லை. 

கடினம் ; தேர்வில் முறைகேட்டை தடுக்க, பெண்களின் தலைமுடியை, பெண் போலீசாரும், 
ஆசிரியைகளும் சோதனையிட்டனர்.பல இடங்களில் தண்ணீர் பாட்டில் கொண்டு 
செல்லக்கூட, அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வுக்கு, பெரும்பாலும் பெண் பட்டதாரிகளே 
அதிகம் வந்திருந்தனர். அவர்களுக்கு துணையாக, கணவர், மாமியார், நாத்தனார் என, குடும்பத்தினர் வந்திருந்தனர். தேர்வில் பங்கேற்றோர், 'வினாத்தாள் கடினமாகவும், சிந்திக்கும் வகையிலும் இருந்தது' என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.