WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 26, 2017

பிளஸ் 2 தேர்வர் பட்டியல் திருத்தம் செய்ய இறுதிவாய்ப்பு.

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வர் பட்டியலில், திருத்தம் செய்து கொள்ள, இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தனித்தனியே தேர்வெழுதும் மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 


இப்பட்டியல் அடிப்படையில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதால், அதில் பிழைகளை தவிர்க்கும் வகையில், பல கட்டங்களாக சோதித்து சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட, தேர்வர் பட்டியலில் பிழைகள் இருப்பின், திருத்தம் செய்து கொள்ள, இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


அனைத்து தலைமை ஆசிரியர்களும், தேர்வுத்துறை இணையதளத்தில், தங்களது பள்ளி மாணவர்களின் பெயர்பட்டியலை சரிபார்த்து, பிழைகள் இருப்பின் சரிபார்க்கவும், அதுகுறித்த அறிக்கையை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 


செய்முறை தேர்வு முன்கூட்டியே துவங்க உள்ளதால், இனி பிழைகள் திருத்தம் செய்ய, வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.