WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 13, 2018

விடுமுறை விட மறுத்த பள்ளிகள்.

பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையில், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் வகுப்புகளை அறிவித்துள்ளன.
பொங்கல் பண்டிகை, நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு, நேற்று முதல், 16ம் தேதி வரை, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளது. 
ஆனால், சில தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அரசு உத்தரவை மீறி, நேற்று வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. 
சில பள்ளிகள், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்திஉள்ளன.
நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கவும், நாளை மறுநாள், சிறப்பு வகுப்புகள் நடத்தவும், சில பள்ளிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள உறைவிட பள்ளிகள், வழக்கம்போல் இயங்கியதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.