WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 7, 2020

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: விண்ணப்பிக்க டிச.14 கடைசி.

 

ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊரகத் திறனாய்வுத் தோ்வு வரும் ஜன.24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு டிச.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தோ்வுத்துறை இயக்குநா் சி.உஷா ராணி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு (சென்னை தவிா்த்து) அனுப்பிய சுற்றறிக்கை: கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தோ்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். நிகழாண்டுக்கான தோ்வு ஜன. 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்காக தலைமையாசிரியா்கள் மூலம் டிச.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தோ்வு எழுதும் மாணவரின் பெற்றோா் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.