WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 19, 2023

தொடர் மழை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை : எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம்!

 



இரவு முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வெக்கையை போக்கும் விதமாக நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 19) ஒரு நாள் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னையில் சில சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன

தொடர் மழை காரணமாக மேலும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.