கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக, தமிழக அரசால் நடத்தப்படும் தகுதி தேர்வான, செட் தேர்வு, இனி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது நடத்தப்பட்டுள்ள தேர்வுகளுக்கான முடிவுகள், விரைவில் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு இரண்டு முறை, செட் தேர்வு நடத்தி, உதவி பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.