WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 30, 2025

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு: மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள்.

 



அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு​கள் இன்று (ஜூன் 30) முதல் திறக்கப்பட உள்ளன.



தமிழகத்​தில் அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் நடப்​பாண்டு மாணவர் சேர்க்​கைக்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு கடந்த மே 7 முதல் 27-ம் தேதி வரை நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க 2 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​தனர்​.​முதல்​கட்​ட​மாக சிறப்​புப் பிரிவுக்​கான கலந்​தாய்வும், தொடர்ந்து பொதுப் பிரிவுக்​கான கலந்​தாய்வும் நிறைவடைந்​தது.

இதையடுத்து, அரசுக் கல்​லூரி​களில் முதல்​கட்ட கலந்​தாய்​வின்​போது நிரம்​பாத இடங்​களை நிரப்​புவதற்​கான 2-ம்​கட்ட சேர்க்​கைப் பணி​கள் தற்​போது தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. இதற்​கிடையே கலை, அறி​வியல் படிப்​பு​களில் சேர்ந்த முதலா​மாண்டு மாணவர்​களுக்கு ஜூன் 30-ம் தேதி வகுப்​பு​கள் தொடங்​கப்​படும் என்று கல்​லூரிக்​கல்வி இயக்​குநரகம் அறி​வித்​திருந்​தது.

அதன்​படி முதலா​மாண்டு மாணவர்​களுக்​கான வகுப்​பு​கள் இன்​று(ஜூன் 30) தொடங்​கப்பட உள்​ளன. இதையடுத்து மாணவர்​களை வரவேற்க அரசுக் கல்​லூரி​களில் சிறப்பு நிகழ்ச்​சிகள் ஏற்​பாடு​ செய்​யப்​பட்​டு உள்​ளன. மேலும், ராகிங் போன்ற சம்​பவங்​கள் நடை​பெறாத​வாறு கல்​லூரி வளாகங்​களில் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் துறை அதி​காரி​கள் தகவல் தெரி​வித்​தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.