ஆசிரியையிடம், 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அலுவலரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி நகர வட்டார கல்வி அலுவலரான லதா பேபி, வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பில் உள்ளார். ஜூலை மாதத்தில், வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்ற மணப்பாறையை சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியைக்கு, நான்கு நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. அதை பெறுவதற்காக, லதா பேபியிடம் கடிதம் கேட்டதற்கு, அவர், 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
விமலா, திருச்சி ஊழல் தடுப்பு பிரிவில் புகார் கொடுத்தார். போலீசார் அறிவுரையின்படி, திருச்சி நகர வட்டார கல்வி அலுவலகத்தில், விமலாவிடம், லஞ்சப்பணத்தை வாங்கிய லதா பேபியை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.