WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Showing posts with label TRB TET NEWS. Show all posts
Showing posts with label TRB TET NEWS. Show all posts

Tuesday, September 25, 2018

FLASH NEWS:--->ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பருக்குள் நடத்தப்படும் -TRB- தேர்வு வாரியம் அறிவிப்பு!



Teachers Recruitment Board  College Road, Chennai-600006
What's New?
All Queries / Clarifications relating to Employment Seniority and other issues may be got from the Director of Employment and Training, Guindy, Chennai - 600 032.  Website: tn.gov.in
TRB prepares the merit list only. All matters concerning Appointments and Posting should be got clarified from the concerned User Departments.
HELP LINE
044 - 28272455, 7373008144, 7373008134


மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒன்றாம் முதல் 8-ம் வகுப்பு வரை பணியில் சேர இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் (TET) என்னும் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பருக்குள் நடத்தப்படும் - தேர்வு வாரியம் அறிவிப்பு! மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா, சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் இந்த வகை ஆசிரியர்கள் CTET என்னும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாடு அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வினை தேர்வு

Tuesday, October 4, 2016

3 ஆயிரம் பி.எட். பட்டதாரிகள் கவலை.

மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு மெயின் தேர்வு நடத்தி ஓராண்டுக்கு மேல் ஆகியும் முடிவு வெளியிடப்படவில்லை. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) பணியிடங்கள் 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி நியமனத்துக்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது. அந்த வகையில், டிஇஓ காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 2014 ஜூன் 8-ம் தேதி நடத்தப்பட்டது. 11 காலியிடங்களுக்கான தேர்வை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட். பட்டதாரிகள் எழுதினர். இதில் இருந்து, அடுத்தகட்டமான மெயின் தேர்வுக்கு சுமார் 3 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். மெயின் தேர்வு 2015 ஆகஸ்ட் 6, 7, 8 தேதிகளில் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வு எழுதியவர்கள் கவலையில் உள்ளனர். அவர்கள் கூறியதாவது: டிஇஓ நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் மெயின் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிடவில்லை. மெயின் தேர்வு முடிவை வெளியிட்ட பிறகு அடுத்தகட்டமாக நேர்முகத்தேர்வு நடத்த வேண்டும். அப்படிப் பார்த்தால் பணிநியமனம் முடிய 3 ஆண்டுகள் ஆகிவிடும். உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பணியிடங்களுக்காக நடத்தும் போட்டித்தேர்வின் முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சில மாதங்களிலேயே வெளியிட்டுவிடுகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்திய டிஇஓ மெயின் தேர்வு முடிவு ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவை விரைவாக வெளியிட்டு, அதே வேகத்தில் நேர்முகத் தேர்வையும் முடித்து, பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி விரைவாக வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tuesday, July 29, 2014

Saturday, July 5, 2014

டி.இ.டி., தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு!

ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.