இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 60 இடங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவில் 15 இடங்களே நிரம்பியதும்,100 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் மட்டுமே நடப்பு கல்வியாண்டில் சேர்ந்துள்ளதும் கண்டறியப்பட்டது.
மேலும் முதன்மைப் பாடப் பிரிவுகளான சிவில், மெக்கானிக்கல், கணினி அறிவியல் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளதால் 122 பொறியியல் மற்றும் 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அனுமதியை வரும் கல்வி ஆண்டு முதல் 50 சதவீதம் குறைத்து AICTE உத்தரவிட்டுள்ளது.