"தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பி.எட்.,
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
வினியோகம்,
25ம் தேதி
(நாளை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது,'' என, பல்கலைக்கழகப் பதிவாளர் கணேஷ்ராம் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், 2007-08ம் கல்வியாண்டு முதல் இளம் கல்வியியல்
(பி.எட்.) பட்ட வகுப்புகள் பயிற்று வைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த வகுப்பில் படிக்கும் அனைவரும்,
நூறு சதத் தேர்ச்சி பெறுகின்றனர்.
நடப்பு கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஜூன், 16ம் தேதி முதல் ஜூலை,
16ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, இந்தப் பல்கலைக்கழகத்தில், முறைசார் கல்வி வழி
(ரெகுலர்) பயிற்றுவிக்கப்படும், இளம் கல்வியியல் பட்ட வகுப்புக்கான விண்ணப்பங்கள் பெறவும்,
நிறைவு செய்து அனுப்பவும் ஜூலை,
25ம் தேதி
(நாளை) வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.