ஆசிரியர் தகுதித் தேர்வில் (2012-13) தேறியோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும்
பணி, 4 மண்டலங்களில் இன்று துவங்குகிறது.கடந்த 2012 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்து, இதர அரசுப் பணி கிடைத்தும் செல்லாமல் காத்திருப்போருக்கு, இந்த முகாமில் வாய்ப்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம், வேலுார், திருச்சி, தஞ்சை, நாகபட்டினம், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் நடக்கிறது.
www.kalvikkuyil.blogspot.com
சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆக.,13, 14 ல் நடக்கிறது.
www.kalvikkuyil.blogspot.com
விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி கன்டோன்மென்ட் வெர்சரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி, மதுரை ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 4 நாட்கள் இப்பணி நடக்கிறது.
www.kalvikkuyil.blogspot.com
பிறந்த தேதி, ஜாதி, மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யவும், தமிழ் வழி பயின்ற சான்றிதழை சமர்ப்பிக்கவும் அசல் சான்றிதழ்களுடன் இதில் பங்கேற்கலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.