தமிழகத்தில் 1600 பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால் அவற்றை
மூடுவதற்காக அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் பாலசந்தர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி சங்க நிறுவனர் மாயவன் ஆகியோர் கூறியதாவது: கல்வி உரிமை சட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள கல்வி உரிமை சட்டத்தை, குழந்தை பிறந்தது முதல் 16 வயதுவரை திருத்தி அமைக்க வேண்டும். நாட்டின் மொத்த வருமானத்தில் 6 சதவீதத்தையும், மத்திய பட்ஜெட்டில் 10 சதவீதத்தையும்,ஒவ்வொரு மாநில பட்ஜெட்டிலும் 30 சதவீதத்தை கல்விகாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள், சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். கல்வித்துறையில் தொகுப்பூதியம், பகுதி நேரவேலையை ஒழித்து, காலமுறை ஊதியம் அமல்படுத்த வேண்டும். கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர், மாணவர்கள் விகிதாச்சாரம் 30:1 என்ற விகித்தில் கொண்டு வர வேண்டும். பல பள்ளிகளில் 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். அவர் 25 பாடங்களை எடுக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் சிறுமலை வேளாண் பண்ணை, பழநியில் மீனாட்சிநாயக்கன்வலசு உட்பட 10 பள்ளிகள் மாணவர்கள் வராததால், மூடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.