WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 7, 2014

தகுதிகாண் மதிப்பெண் முறை: ரத்து செய்யக் கோரிக்கை

ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய
வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரியுள்ளது.

இது தொடர்பாக அந்தக் கழகத்தின் தலைவர் பி.இளங்கோவன் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பணி அனுபவத்தை மட்டுமே ஆசிரியர் நியமனத்துக்கான தகுதியாக கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், தகுதிகாண் மதிப்பெண் முறையில் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட். படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கை, கடந்த சில ஆண்டுகளில் பிளஸ் 2 முடிப்பவர்களுக்கே நிச்சயம் சாதமாக இருக்கும்.

அதோடு, பட்டப்படிப்பில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு மதிப்பீட்டு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அனைவரையும் ஒரே அளவுகோலில் கருதுவது சரியானதாக இருக்காது.

எனவே, ஆசிரியர் நியமனத்துக்கான தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.